Sunday, December 16, 2007

நீயும் நானுமல்லாது.......

நீயும் நானுமல்லாது........



நீயும் நானுமல்லாது
நம் ரகசியங்கள்
பரகசியமாகிறது-நாம்
பரிமாறிக்கொண்ட பாஷை
யாரோ அறிவர்....

கண் எட்டும் தூரம்தான்
நாம் நடந்து வந்த பாதை,
திரும்பிப் போக
அணுமதி இல்லை….

திரும்பிப் போவதோ
விரும்பிச் செல்வதோ உன்
இதயத்தின் சொல்லுக்காய்
காத்திருக்கும்
புதிய பாதைகளும்
நம் கால்களும்....

எதையும் தொலைக்காமலேயே
தேடுவதும்
நினைவிலில்லாத எதையோ
நினைப்பதும்
எதையோ எதிர்பார்த்து
மௌனமாவதுமாய் ஓரு
வரைமுறை இல்லாத
வாழ்க்கை.....

உன் கண்கள் வழி
உன்னில் கருவுற்றுப்போன
காதலின் பிறசவம்
ஓரு முடிவிற்கு வராமல்
கதைத்துக்கொண்டே செல்கையில்
தினம் கூடிப்பேசும்
ஆல மரத்தடியும்
ஓருநாள் பொறுமையிழக்கும்...

ஓரடி தூரத்தில் நீ இருந்தும்
ஓரு முறைகூட நீ
இதயம் திறக்கவில்லை..
தினமும் உன்
முகம் பார்க்கிறேன்
ஓருமுறையேனும்
என் இதயத்தைப் கேட்பாய் என...

தினம் ஓராயிரம் முறை
என்னை புகழ்கிறாய்
எப்போது என்னை
கடிந்து கொள்வாய்
உரிமையோடு...

எத்தனை முகங்கள்
தினம் நம்மை
அற்புதக் காதலின்
அடயாளமாய் பார்வையால்
வாழ்த்துகின்றன- உன்
ஓரு முகம் மட்டும்
சந்தேகத்தின் அடயாளமாய்....

உன்னை நினைவில் நிறுத்த
எனக்கு ஏதாவது
வேண்டும் –அது உன்
வார்த்தையானாலும்
வாழ்க்கையானாலும்...

வார்த்தையோ
வாழ்க்கையோ நமக்காய்
முடிவு செய் -ஓரு
புதிய வழிமுறைக்காய்
என் இதயம் திறந்திருக்கும்
ஈர விழிகளோடு............


இனியும் பறண்டுவோம்........

நான் பயணப்படுகிறேன்......

அனைவரையும் வரவேற்கிறேன்.....
என் வழிப்பாதையை
செப்பனிட.....

நான் பயணப்படுவது
ஒருவழிப்பாதையோ
அல்லது
ஒரு
வழிப்பாதையோ....