Wednesday, May 12, 2010

Hai friends, 

  After a long time I am going to refresh my Blog PARANDIMUKKU in a new way...

I am expecting your valuable comments and ideas.


ENDRUM PRIYAMUDAN

ABU FAHAD.


Friday, October 23, 2009

வெங்காயத்தின் பலன்கள்
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது.இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
வெங்காயம்

Thursday, August 6, 2009

நான் பயணப்படுகையில்..........

நான் பயணப்படுகையில்..........


இரவுகளினூடே பயணப்படுகிறேன்

அது ஓர்
ஓருவழிப்பாதை ; ஒரு
ஒற்றையடிப் பாதையும்கூட !

இரு விழிகளை நம்பி
ஓரு வழியில் என் பயணம்
நீ மூன்றாவது விழியாய்
என் பின்னால் !

அலட்சியமான ஓர்
லட்சியமற்ற பயணம்,
பயணத்தினூடே நான்
காண்பதெல்லாம் எனக்கு
பாடமாகுமோ..

என்னைச்சுற்றி ஏதேதோ
நடந்தபோதும் நான்
அறிந்தும் அறியாமலுமாய்-ஆனால்
நீ முழுவதும் ரசித்தவாறே
பயணிக்கிறாய்.!.

நான் தன்னந்தனியாய்
பயணிக்கையில், நீ மட்டும்
பலகோடி முகங்களோடு !
நான் எங்கே நிற்கிறேனோ
அங்கே நீயும் நின்றுகொள்கிறாய் !

எனது தவறுகள்
எனது செயல்கள்
எனது அறியாமை என
அனைத்தையும் நீ
பதிவு செய்கிறாய்..

நான் உனை
பாற்கும்போதெல்லாம்
எனைப்பார்த்து நீ
சிரிக்கிறாய்..

உனது பயணத்தில் ஓரு
அலட்சியமில்லாத
இலட்சியம் தெரிகிறது-அது
என்னவென்று என்னால்
புரிய முடியவில்லை...

என்னை நீ ஏன் தொடர்கிறாய்
என என்னை நானே
கேட்டுக்கொள்கிறேன்...

பரந்து விரிந்த அந்த
இருண்ட வான்வெளியை
இரவினூடே நான் ரசிக்கையில்
நீ என் முகம் மறைக்கிறாய்..

சில நேரங்களில் நீ
வெறிக்கிறாயா சிரிக்கிறாயா
என்னால் அறிய முடியவில்லை...

அந்த ஓற்றையடி
ஓருவழிப்பாதையில்
பெரும்பகுதி கடந்துவிட்டேன்
நான் களைத்துப்போயினேன்-நீயோ
ஆரம்பத்தில் இருந்த அதே
உற்சாகத்தோடு...

இரவு நிறம் மாறி
விடியலெனும் புதிய நிறமாய்,
இப்போது கடலின்
கரை தொட்டு நிற்கிறேன்-அந்த
ஓற்றையடி
ஓருவழிப்பாதையின் முடிவில்- உன்னை
திடீரென தொலைத்த
அதே இடத்தில்..

நிலவே
இப்போது நான்
ஓரு புதிய வழிப்பாதையில்
அலட்சியமில்லாத இலட்சியமுள்ள
ஓரு புதிய பயணத்திற்காய்
உன்னைத்தேடி................


பறண்டியான்..........

Wednesday, August 5, 2009

சேல்ஸ் மேன்......


சேல்ஸ் மேன்......

இடது கையில் எண்ணை
உறிஞ்சும் பேப்பரால் சுற்றப்பட்ட
சாண்ட்விட்ச் - வலது கையில்
ஸ்டீயரிங்,
இடை இடையே கியரும்
மாற்றவேண்டும்...


சீறிப்பாயும் அறபிகளின்
வண்டிகளுக்கிடையில் கவனமும்
சிதறக்கூடாது - பகுதி தின்றுவிட்ட
சான்ட்விட்சின் பேப்பரும்
அகற்றவேண்டும்,


நொடி இடையில்
முதல் ரோட்டிலிருந்து மூன்றாம்
ரோட்டிற்கு தாவும் வாகனங்களை
சரியாக கவனித்து ஓட்டவும் வேண்டும்.


ஏனெனில் பின்னிலிருந்து
இடித்தாலும் முன்னிலிருந்து
இடித்தாலும் இருவரும் அறிவர்
காத்திருப்பின் அவஸ்த்தையை...


சில நேரங்களில் மற்றவன்
உயிரின் ஊசலாட்டமும்
அது போகும் வலியும்
நம் கண்களில் பதியும்...


இப்படித்தான் அரபு நாட்டின்
சாலைகளும் மனிதன் சார்ந்த
வாழ்க்கையும் - ஒரு
பொறுப்பில்லாத உலகம்....


ஒரு அரபிக்கு
அன்றைய தினம்தான் அவனின்
லட்சியம் - ஒவ்வொரு
இந்தியனுக்கும் அன்றைய தினம்
லட்சியப்பாதையின் சில மணித்துளிகள்...


அலறித்துடிக்கும் மொபைல் போணில்
அவனின் மேலாளர் அசுரனாய் - தன்
தந்தைக்கே பயப்படாதவன் பணிவாய்
சொல்லும் "சாரி"கள் சில நொடிகளில்
கணக்கிலடங்கா...

வைத்த கை மாறாமல்
அடுத்த அழைப்பு
வங்காள விரிகுடாவை அடக்கி
அரபிக்கடலையும் தாண்டி
அவன் செல்போணில்- செல்லமாய்
சிணுங்குகிறாள் மனைவி,



எகிறித்துடிக்கிறான்
தன் ஆசை மனைவி என்றும் பாராமல்
சனியனே உனக்கு
நேரம் காலம் தெரியாதா என்று....

தன் அலுவலுக்கு முன் அன்பு
அடங்கிப்போகிறது - மீண்டும்
துளிர் விடுவதோ ஆறு மணிக்கு மேல்
சத்தமில்லாத முத்தங்களாய்,
அப்போதுதான் அலுவல்கள்
அழகான அன்பாய் பரிணமிக்கிறது....

காற்றைக் கிழிக்கும் வேகமும்
இடுப்பொடியும் பாரமும்
மறந்து போகிறான் தன் அன்பு மகனின்
அப்பா எனும் தொலை தூர
மழலை அழைப்பில்....

கடிதங்களை காத்திருக்க மனம்
பொறுப்பதில்லை- அதனால்த்தான்
தன் வியர்வைத் துளிகளை
தொலைபேசிக் கட்டணங்களாய்
கரைக்கிறான் வெள்ளிக்கிழமைகளில்.....

தான் படித்தபோது டிகிரிக்கு
கொடுத்த கல்விக்கட்டணத்தைவிட
பல மடங்கு பெரிதென்றாலும் தன்
பிள்ளைக்காய் எல்.கே.ஜி.
நுழைவுத்தேர்வு எழுதுகிறான்
பெருமையாய்.....


தான் வாங்காவிட்டாலும்
தகுதிக்கு மீறி கொடுக்கிறான்
வரதட்சினை
தகுதியே இல்லாத மாப்பிள்ளைக்கு
தன் தங்கைக்காய்...

இப்படியாய் வருடங்களின்
துவக்கமும் இறுதியும் பார்த்து
வயதை அடைகிறான்
நிம்மதியையும் தன்னையும் மறந்து...

ஒரு பொழுதில்,

ஒரே ஒரு கணம்,
நீ எனும் நீ எதையோ தொலைத்து
தேடுவதாய் உணர்வாய் - அன்று
நீ எனும் நீ உலகத்திற்கு காலாவதியாகிறாய்....


என்றும் பிரியமுடன்.........

பறண்டியான்........

Tuesday, August 4, 2009

ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம்.......

என்ன நண்பர்களே, நிறைய நாள் ஆகிவிட்டது என்று பார்க்கிறீர்களா....
இறைவன் அருளிய இயற்கையான வாழ்க்கை நடை முறைகளை மறந்துவிட்டு அதற்கு நேர்மாற்றமான நடை முறைகளை அறிமுகப்படுத்தியும், நாகரீக கலாச்சாரம் என்ற போர்வைக்குள் நாசகார அழிவுப் பாதைகளை உருவாக்கி கொள்ளும் மனிதகுலத்தை நினைத்து அழுவதா? கோபப் படுவதா? எனத் தெரியவில்லை ! இறைவனால் படைக்கப் பட்டவைகளிலேயே மிகவும் அழகான, அறிவான, உயர்ந்த பண்புகளுக்குரிய ஒரே படைப்பு மனித இனம்தான் ! மனிதருக்கும் மற்ற படைப்பினங்களுக்கும் ஒரே வித்தியாசம் பகுத்தறிவு மட்டும்தான் !
இறைவனின் முதல் படைப்பு ஆண் என்றும் அதற்கு துணை படைப்பு பெண் என்றும் தான் இயற்கை அமைந்துள்ளது. ஆண்கள் வெளியே ஆளுமை கொண்டவர்களாகவும் பெண்கள் வீட்டிற்குள் ஆளுமை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எதார்த்தத்தை எப்போது மனிதர்கள் மாற்றத் துடித்தனரோ, அப்போதே பல்வேறான தீங்குகள் நம்மை சூழ்ந்து விட்டன.
ஆணுக்குப் பெண் சமமென்பது குடும்பவியலுக்கு வேண்டுமானால் ஒரு வகையில் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் உலகவியலுக்கு அதாவது வீட்டுக்கு வெளியேயும் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்ற ஆணவப்போக்கு தொடர்வது எவ்வகையிலும் நியாயமாகாது என்பது தான் நமது நிலைபாடு !
ஒரு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவது எதற்காக? பிள்ளைகள் பெற்றுக் கொள்வது எதற்காக? பெற்றெடுத்த பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்த் தெடுப்பது யாருடைய கடமை? குடும்பவியலின் தத்துவமென்ன? இப்படி பல்வேறான கேள்விகளுக்கு குறைந்தபட்ச சிந்தனையை கூட செலுத்த முடியாத ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவதால் மனித குலத்திற்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப்போகிறது?
ஒரு ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவதின் முதல் நோக்கமே மனித சந்ததிகளின் அபிவிருத்தி தான் ! இரண்டாவது கணவன் மனைவி ஒருவருக்கொருவர் துணை என்பது தானே தவிர இணை என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
தன்னை நம்பி வந்த பெண்ணை மனநிறைவுடன் வாழ வைக்க வேண்டிய கடமை ஆணுக்கு உண்டு அதனால் தான் ஆண் உழைக்க சென்று விடுகிறான். கணவன் வெளியில் சென்றுவிடுவதால் வீட்டையும் அதில் உள்ள பொருட் களையும் பாதுகாப்பது ஒழுங்குபடுத்துவது போன்றவை மனைவியின் கடமையாகி விடுகிறது. இதில் பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைகளை பராமரிப்பதும், ஆரோக்கியமான சூழலில் பாதுகாத்து வளர்ப்பதும் மனைவியின் தலைசிறந்த பணியாகும்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் உழைத்து பொருளீட்டுவது ஆண்களின் கடமை என்றும் வீட்டை நிர்வகிப்பது பெண்களின் கடமையென்றும் இருந்த எதார்த்தமான வாழ்க்கை நடைமுறையில் குடும்பவியலுக் கென்று ஒரு தனிச்சிறப்பு இருந்தது. கணவன் குழந்தைகளுக்கு தேவையான உணவு வகைகளை பார்த்து, ரசித்து, ருசித்து சமைத்து கொடுக்கும் பெண்களாகவும், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தும் தாயாகவும் இருந்ததால் தான் அன்றைய காலத்தில் (Health is Wealth) ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு உயிரோட்டமிருந்தது.
அன்றைய பெண்களின் பொழுதுபோக்கே தம் பிள்ளைகளை நல்ல முறையில் ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பதுதான். தாயின் அரவணைப்பிலும், நேரடி கண்காணிப்பிலும் வளர்ந்த குழந்தைகளின் காலம் வரைக்கும் நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்குமே முதியோர் இல்லம் உருவாகியதில்லை !
காரணம் பெற்றோர்கள் பிள்ளைகள் என்ற கூட்டுக் குடும்ப தத்துவத்தில் எவ்வித இடைவெளிகளும் ஏற்பட்டதில்லை. கணவன் – மனைவி குழந்தைகள் என்ற அற்புதமான வாழ்க்கை நடைமுறையில் பொழுது விடிந்து வெளியில் வேலைக்கு சென்று விட்டு அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்பும் கணவனின் வருகைக்காகவும், காலையில் பள்ளிக்கூடம் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் தன் பிள்ளையின் வருகைக்காகவும் ஆவலுடன் காத்திருக்கும் இல்லத்தரசியின் இனிய பாசத்திற்காக ஏங்கிய கணவன், பிள்ளைகள் என்ற அந்த உணர்வை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது !
கணவன், மனைவி, பிள்ளைகள் என எல்லோரும் அமர்ந்து தங்களது உணர்வுகளையும், அன்புகளையும் பரிமாறிக் கொண்டதால் தான் பாசமும், நேசமும், மனிதாபிமானமும் அன்றைய மனிதர்களிடம் மிகைத்திருந்தது. ஆனால் இன்றோ? ஆணுக்குப் பெண் சமம் என்ற மேலை நாட்டின் சீரழிந்த கலாச்சார அடையாளத்தை நாமும் ஏற்றுக் கொண்டதால் இன்று மூலை முடுக்கெல்லாம் முதியோர் இல்லங்கள் தோன்றி விட்டன.
ஆண்கள் உழைப்புக்காக வெளியேறும் அதே நேரத்தில் பெண்ணும் உழைப்புக்காக வெளியேறுகிறாள். அவர்களது பிள்ளைகளும் படிப்பிற்காக வெளியேறுகின்றனர். வீடு பூட்டப்பட்டு விடுகிறது. மாலையில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருத்தராய் வீடு திரும்புகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் தங்களது அலுவலக கூடுதல் பணி நிமித்தமாக நீண்ட நேரம் கழித்து அதாவது குழந்தைகள் உறங்கிய பின்னரும் கூட வீடு திரும்புவதுண்டு. பெற்றோர்களின் பாசம் கிடைக்காத ஏக்கத்திலேயே குழந்தைகளும் தூங்கி விடுகின்றனர்.
பிறகு காலையில் அவசர அவசரமாக எழுந்து அவரவர் பணியில் கவனம் செலுத்தி ஒவ்வொருத்தராய் பிரிந்து விடுகின்றனர். இது போன்ற வாழ்வியல் சூழ்நிலைகள் தான் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்தி பாசப்பிணைப்புகளை வேறருக்கச் செய்து விடுகின்றன !
இதன் எதிர்கால விளைவு இன்றைய பெற்றோர்கள் நாளைய முதியோர் இல்லத்தின் நிரந்தர உறுப்பினர்களாவர். அமைதியான வாழ்க்கை முறையை இயந்திரத்தனமாய் உருவாக்கி கொண்டது யார்? பெண்களே தான் ! வீடங்கி இருக்க வேண்டிய பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் முற்றிலும் பாதிக்கப்படுவது பிள்ளைகள் தான் !
பாவம், அந்தப்பிள்ளைகளுக்கு தாய்ப்பாசம் கலந்த பாதுகாப்பான உணவை தன் கைப்பட சமைத்துக் கொடுக்க நேரமில்லாதவளாக தன்னை மாற்றிக் கொண்டதால் தற்போது ஆங்காங்கே புற்றீசல் போல குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் ஃபாஸ்ட் புட் உணவு விடுதிகள் கிளம்பி விட்டன.
அந்த உணவு விடுதிகளில் தயார் செய்யப்படும் ஒவ்வொரு வகையும் வினிகர், அஜீர்ண்மோட்டா, மிஷினரி போன்ற மனித குலத்திற்கு விரோதமான பல்முனைக் கலவைகளால் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய உணவு முறைகள் தான் தற்போது ஏதுமறியாத பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்து வருகின்றன.
கடந்த இரண்டு மாதத்தில் அமீரகத்தில் மட்டும் ரிஸாப் ஃபிரனக் (வயது 2) ஷாஜியா ரஹ்மான் (4) மர்வா பைஸல் (4) நாதன் டிசவுசா (5) செல்சியா (7) ஆகிய ஐந்து குழந்தைகள் ஃபாஸ்ட் புட் உணவை உட்கொண்டதால் இறந்துள்ளனர். என்ற செய்தியை நாளிதழ்களில் படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது !
வினிகர், அஜீர்ணமோட்டா போன்றவை குழந்தைகளின் உணவு செறிமான சக்திக்கு எமனாகும். நமது ஊர்களில் கூட இப்போது பீப் பக்கோடா, சிக்கன் பக்கோடா போன்ற வினிகர், அஜீர்ணமோட்டா கலந்த ஃபாஸ்ட் புட் விஷ உணவுகள் சக்கைப் போடு போடுகின்றன. நல்லது கெட்டதை பிரித்தறிய முடியா பிஞ்சுக் குழந்தைகளுக்கு விஷம் என்று தெரிந்தே வாங்கி கொடுக்கும் ஈவு இரக்கமில்லா பெற்றோர்களை இறைவன் மன்னிக்க மாட்டான் !
அவரவர்தம் பிள்ளை களுக்கு தத்தமது வீட்டிலேயே தேவையான உணவு பண்டங்களை தயார் செய்து கொடுக்கலாமே, என சமூக அக்கறையுடன் நாம் கேட்டால் எங்களுக்கு அதற்கேது நேரம்? என எதிர் கேள்வி கேட்கத் துடிக்கும் பெண்களே ! உங்களின் இந்தக் கேள்வியை பிள்ளைகளை பெற்றெடுப்பதற்கு முன்பே யோசித்து இருக்க வேண்டும்.
“மலடி” என்ற சமூக அவப்பெயரிலிருந்து விடுபடவே குழந்தைப் பெறுகிறோம் என நினைத்தால் அதற்கு திருமணமே செய்யாமல் இருந்து விடலாமே ! குழந்தைப் பெற்றால் அதை நல்ல முறையில் பேணி பாதுகாத்து அதற்கு தேவையான அனைத்தையும் பெற்றவளே செய்யத் துடிக்க வேண்டும் ! அது தான் குழந்தைப் பெற்றலின் உண்மையான நோக்கமாயிருக்கும்.
ஆண், பெண் உழைப்பு சம உரிமையின் அடையாளம் என நினைத்துக் கொண்டு அப்பாவிக் குழந்தைகளின் உரிமைகளை குழி தோண்டி புதைப்பது மிகப் பெரிய பாவமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பரபரப்பான வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட ஃபாஸ்ட் புட் எமனுக்கு பழி கொடுத்துவிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஐயத்தோடு நின்று போகட்டும் ! இனியாவது விழிப்புணர்வுடன் நம்முடைய முன்னோர்கள் காட்டித் தந்த பாரம்பரிய குடும்பவியல் நடைமுறைகளை பின்பற்றி குழந்தைகளின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பை உருவாக்கும் வகையில் வீட்டிலேயே சமைத்து கொடுக்கும் பெற்றோர்களாய் மாறுவோம் !
பிள்ளைகளுடன் நெருக்கமாவோம் !
வேண்டாமே, ஃபாஸ்ட் புட் எமன் உறவு!!
நன்றி : mudukulathur.com

Monday, June 8, 2009

மனிதர்களாகப்பிறந்த ஒவ்வொருவரும் பாவங்களை செய்யக்கூடியவர்கள்தான். செய்யக்கூடிய பாவங்களுக்கு மத்தியில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இருக்கும். சிலவிஷயங்கள் பாவம் என்று தெளிவாகவே தெரிந்து கொண்டு செய்யும் பாவங்களும் உண்டு. உதாரணமாக, மது-மாது-புகைப்பழக்கம் இதுபோன்ற பாவங்களை செய்பவர்களிடம் 'உங்களின் இந்த செயல் பாவமா? அல்லது நன்மை பயக்கக்கூடியதா? என்று கேள்வி எழுப்பினால், இது தவறுதான்! பாவம்தான்! ஆனாலும் விட முடியவில்லை என்று கூறுவதை காணலாம்.
இன்னும் சில பாவங்கள் பாவம் என்று சமூகம் அறியாமலேயே செய்யக்கூடியவைகளும் உண்டு. அவைகளில் ஒன்றுதான் பெண்ணிடம் திருமணத்தின்போது, வரதட்சனை என்றபெயரில் பணமாக, பொருளாக, சொத்துக்களாக பெண்வீட்டாரிடமிருந்து பெறுவது. இந்த செயல் பரவலாக படித்தவர் பாமரர், சாதி- மதம் கடந்து பெரும்பான்மை மக்களை ஆட்கொண்டுள்ளது. இப்படி திருமணத்தின்போது பெண்ணிடம் ஒரு ஆண்மகன் கையேந்துவது சரியா? என்ற வினாவை இவர்களை நோக்கி நாம் முன்வைத்தால், இவர்கள் சொல்லும் பதில் 'ஊரு ஒலகத்துல யாரும் செய்யாததையா நாங்க செஞ்சுப்புட்டோம்' என்று சாதாரணமாக சொல்வதை காணலாம். இவ்வாறு அவர்கள் சொல்வதற்கு காரணம் வரதட்சனை என்பது சகஜம் அது ஒரு பாவமான செயல் அல்ல. என்பது அவர்களின் எண்ணம். நாம் இந்த ஆக்கத்தில் வரதட்சனை பாவம் என்று அறியாத மக்களை பற்றி எழுதவரவில்லை. மாறாக, வரதட்சனை வாங்குவது பாவம், அப்பட்டமான இறைக்கட்டளை மீறல், என்றெல்லாம் திருமறையின் வசனத்தை 'வீராவேசமாக' முழங்கிவிட்டு தனது திருமணத்தின்போது, 'தாய்சொல்லை தட்ட முடியவில்லை' என்று வரதட்சனை வாங்கி 'பித்'அத்' திருமணம் செய்யும் தவ்ஹீத் வாதி[வியாதி]களைத்தான் இந்த கட்டுரையின் மைய கருத்தாக வைத்துள்ளோம்.
அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்;
وَآتُواْ النَّسَاء صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.4:4

இந்த வசனம் அனைத்து தவ்ஹீத்வாதிகளுக்கும் அத்துப்படி. ஆனாலும் திருமண நேரத்தில் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு வழக்கமான வரதட்சனை திருமணம் செய்வது ஏன்? இப்படி கேட்டால்நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்ணுனேன் நபிவழியில் மஹர் கொடுத்துதான் திருமணம் செய்யனும்னு. ஆனா எங்கம்மா' டேய்ய்! நான் சொல்றமாதிரி ஊரு ஒலகத்துல நடக்குறது மாதிரி நீ கல்யாணம் பண்ணலைன்னா நான் செத்துருவேன் என்று பிடிவாதமா சொன்னாங்க! அதுனால வேற வழியில்லாம 'நிர்பந்தத்துல' அப்படி பன்னவேண்டியதா போச்சு! என்று சொல்வதை பார்க்கிறோம்.

பெற்றோரை கண்ணியப்படுத்தவேண்டும், அவர்களுக்குரிய கடமையை செய்யவேண்டும் என்பதை வேறு எந்த மதமும் சொல்லமுடியாத அளவுக்கு இஸ்லாம் அளவுக்கு அதிகமாகவே சொல்லிக்காட்டுகிறது. அல்லாஹ் கூறுகின்றான்;وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًاஅவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!17:23

இந்த அளவுக்கு பெற்றோரை கண்ணியப்படுத்துமாறு நமக்கு கட்டளையிடும் வல்ல இறைவன், இறைவனது- இறைத்தூதரின் கட்டளைக்கு மாற்றமான ஒன்றை செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தினால், அப்போது நம் பெற்றோருக்கு கட்டுப்படாமல், நம்பெற்றோரையும் நம்மையும் இந்த உலகையும் மற்றும் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வுக்கே கட்டுப்படவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்;وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."31:15

மேற்கண்ட இந்த வசனம் மட்டும் தவ்ஹீத்வாதிகளுக்கு மறந்ததேன்! அப்ப தவ்ஹீத் என்றால், தர்காவுக்கு செல்லக்கூடாது, பாத்திஹா ஓதக்கூடாது, தொழுகையில் விரலசைக்கணும், பள்ளிவாசல் சுவர் கீறல்விழும் அளவுக்கு ஆமீன் என்று அலரனும். இவைதான் தவ்ஹீத் என்ற குறுகிய வட்டத்தில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம்.. ஆனால் நபி[ஸல்] அவர்களால் உருவாக்கப்பட்ட சத்தியசகாபாக்கள், பெற்றோருக்கு பணிவிடை செய்வதிலும், எந்த குறையும் வைக்கமாட்டார்கள். அதே நேரத்தில் இறைக்கட்டளைக்கு மாற்றமான ஒன்றை பெற்றோர் செய்யத்தூன்டினால், பெற்றோரை புறக்கணிப்பார்கலேயன்றி, இறைக்கட்டளையை புறக்கனிக்கமாட்டார்கள். இதோ! ஸ'அத் இப்னு அபீவக்காஸ் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி;
நான்[ஸ'அத்] இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை என்னுடன் பேசமாட்டேன் என்றும், உன்னவும் பருகவும் மாட்டேன் என்றும் என்தாயார் சத்தியம் செய்துவிட்டார்.மேலும் என்தாய், உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். நான் உன்தாய். நான்தான் இவ்வாறு[ இஸ்லாத்தை விட்டுவிடுமாறு] கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் என்தாயார் மயக்கமுற்றுவிட்டார்கள். அப்போது அவரது உமாரா எனப்படும் மகன், என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார்..அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார். அப்போது அல்லாஹ்,وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُநாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
ஆகிய வசனங்களை அருளினான். என்று ஸ'அத் இப்னு அபீவக்காஸ்[ரலி] அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் 4789. ஹதீஸாக பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில், தன்னுடைய தாய் மூன்று நாட்கள் உணவருந்தாமல், பருகாமல் மயக்கமுற்றபோதும், ஸ'அத் [ரலி] அவர்கள், தன்னுடைய தாயின் கட்டளையைவிட இறைக்கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்த அந்த உறுதி இன்றைய தவ்ஹீத்வாதிகளிடம் காணாமல் போனதேன்..?

இறுதியாக உபதேசம் ஊருக்குத்தான்;பேசும் எங்களுக்கல்ல.என்று கருதுபவர்களே! இதோ! அல்லாஹ்வின்கூற்றை கவனியுங்கள்;
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (61:2)كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَநீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:3)எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை சொல்லிலும், செயலிலும் தவ்ஹீத்வாதிகளாக வாழ்ந்து மரணிக்கச்செய்வானாக!


என்றும் அன்புடன்

பறண்டியான்

WHY PORK FORBIDDEN IN ISLAM?..........

WHY IS PORK FORBIDDEN IN ISLAM ?


WE ARE ASKED THIS QUESTION ON A DAILY BASIS, SO NEXT TIME SOME ONE ASKS YOU WHY WE CANNOT EAT PORK, GIVE THEM THE FACTS... Bob: Tell me why is it that a Muslim is very particular about the words Halaal and Haraam; what do they mean? Yunus: That which is permissible is termed Halaal and that which is not permissible is termed Haraam and it is the Quran which draws the distinction between the two. Bob: Can you give me an example? Yunus: Yes, Islam has prohibited blood of any type. You will agree that a chemical analysis of blood shows that it contains an abundance of uric acid, a chemical substance which can be injurious to human health. Bob: You're right about the toxic nature of uric acid, in the humanbeing it is excreted as a waste product and in fact we are told that 98% of the body's uric acid is extracted from the blood by the kidneys and removed through urination. Yunus: Now I think that you'll appreciate the special prescribed method of animal slaughter in Islam. Bob: What do you mean? Yunus: You see, the wielder of the knife, whilst taking the name of the Almighty, makes an incision through the jugular veins, leaving all other veins and organs intact. Bob: I see, this causes the death of the animal by a total loss of blood from the! body, rather than an injury to any vital organ. ' Yunus: Yes, were the organs, example the heart, the liver, or the brain crippled or damaged, the animal could die immediately and its blood would congeal in its veins and would eventually permeate the flesh. This implies that the animal flesh would be permeated and contaminated with uric acid and therefore very poisonous; only today did our dietitians realize such a thing. Bob: Again, while on the topic of food; Why do Muslims condemn the eating of pork or ham or any foods related to pigs or swine. Yunus: Actually, apart from the Quran prohibiting the consumption of pork bacon (pig flesh); in fact the Bible too in Leviticus chapter 11,verse 8, regarding swine it says, 'of their flesh of the swine (another name for pig)shall you not eat, and of their carcass you shall not touch; they are ' unclean to you.' Further, did you know that a pig cannot be slaughtered at the neck for it does not have a neck; that is according to its natural anatomy. A Muslim reasons that if the pig was to be slaughtered and fit for human consumption the Creator would have provided it with a neck. 'Nonetheless, all that aside, I am sure you are well informed about the harmful effects of the consumption of pork, in any form, be it pork chops, ham, bacon. Bob: The medical science finds that there is a risk for various diseases as the pig is found to be a host for many parasites and potential diseases. Yunus: Yes, even apart from that, as we talked about uric acid content in the blood, it is important to note that the pig's biochemistry excretes o nly 2% of its total uric acid content, the remaining 98% remains as an integral part of the body. Note: Islam forbids not only pork but meat of all those animals who eat their own or some one else's body waste; the most commonly known animal in this category is pig or swine whose meat is commonly known as pork. Please forward to others.........it may answer some of their questions 'May Peace Be With You


THANKS TO IKHWAN